கோலி முதல் கே.எல்.ராகுல் வரை: ஐபிஎல் அதிக அரைசதம் விளாசியோர் பட்டியல்!


ஐபிஎல் போட்டிகளில், இதுவரை அதிக முறை அரைசதங்கள் (50 ரன்கள்) குவித்த வீரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்...

விராட் கோலி: நடப்பு சீசனில் முலான்பூரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்கள் சேர்த்தார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. 67-வது முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 50-க்கும் அதிகமான ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 50 ரன்கள் குவித்தவர் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

டேவிட் வார்னர்: விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் 66 முறை 50-க்கும் அதிகமான ரன்களை சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தவாண்: முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவாண் 53 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் 50+ ரன்களை எடுத்து, இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மா: மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா 45 முறை அரை சதம் கடந்து, இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.

கேஎல்.ராகுல், ஏபி டிவில்லியர்ஸ்: தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல்.ராகுல் 43 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 43 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார். இருவரும் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

x