இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவேன்: எலான் மஸ்க் தகவல்


இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வர உள்ளதாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுடன் இனணந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுபோல அவருடைய டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனமும் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது, தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியதை பெருமையாக கருதுகிறேன். இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு செல்ல ஆவலாக உள்ளேன்” என கூறியுள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் ஆலோசகராகவும் எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார். அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வது தொடர்பான பேச்சுவாத்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எலான் மஸ்க் இந்தியா வருதை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

x