விளையாட்டுப் போட்டியின் மூலம் கிடைத்த பணத்தை சேர்த்து வைத்து வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண்ணுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த சிறுவனின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தன் மகன் அங்கித் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுச் சேர்த்த பணத்தில் தனது வீட்டில் பணியுரியும் சமையல்கார பெண்ணுக்கு செல்போனை பரிசாக வழங்கியது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், " அங்கித் இதுவரை வார இறுதிப் போட்டிகளில் விளையாடி 7,000 ரூபாய் சம்பாதித்துள்ளார். இன்று அவர் வெற்றிபெற்ற பணத்தில் இருந்து 2,000 ரூபாய்க்கு எங்கள் சமையல்காரர் சரோஜாவுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அங்கித் 6 மாதக் குழந்தையாக இருந்ததிலிருந்தே இவர் கவனித்து வருகிறார். பெற்றோராக நானும், மீரா பாலாஜியும் இதைவிட மகிழ்ச்சியாக இருக்க முடியாது'' என்று பதிவிட்டுட்டுள்ளார். த்துடன் சரோஜாவுக்கு அங்கித் செல்போன் கொடுக்கும் புகைப்படத்தையும் இணைத்து இருக்கிறார்.
இதுகுறித்து அங்கித், " இருப்பதைக் காட்டிலும் கொடுப்பதைப் பற்றி என் பெற்றோர் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். இந்த ட்விட் என்னை நன்றியிலும் மகிழ்ச்சியிலும் நிரப்புகிறது" பதிவிட்டுள்ளதைப் பார்த்த பலரும் சிறுவனைப் பாராட்டி கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம்... மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது!