இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலா நகரில் நேற்று பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கிடையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.
இதேப்போலவே, பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த தர்மசாலா மைதானத்திலும் விளக்குகள் அணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பஞ்சாப்-டெல்லி போட்டிகள் பாதியில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து ரசிகர்களும் உடனடியாக வெளியேறினர்.
பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.