பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே8ல் வெளியீடு: ரிசல்ட்டை தெரிந்துகொள்வது எப்படி?


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 8ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் நடைபெற்றன. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

x