பாகிஸ்தானுக்கு அடுத்த இடி... பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதிப்பு!


புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது, மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு விதிவிலக்கு தேவை என்றால் மத்திய அரசின் முன் ஒப்புதல் அவசியம்’ என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்​காமில் நடத்​தப்​பட்ட தீவிர​வாத தாக்​குதலை​யடுத்து இந்​தியா மற்​றும் பாகிஸ்​தான் இடையே பதற்​றம் அதி​கரித்​துள்​ளது. இதன் தாக்​கம் ஏப்​ரல் 22-ம் தேதியி​லிருந்து பாகிஸ்​தான் பங்​குச் சந்தை வர்த்​தகத்​தி​லும் எதிரொலித்து வரு​கிறது.

இது​வரை கேஎஸ்​இ-100 குறி​யீடு 8,000 புள்​ளி​கள் வரை வீழ்ச்சி கண்டு முதலீட்​டாளர்​களுக்கு அதிர்ச்​சி​யளித்​துள்​ளது. குறிப்​பாக, ஏப்​ரல் 22 முதல் ஏப்​ரல் 30 வரையி​லான கால​கட்​டத்​தில் மட்​டும் பாகிஸ்​தான் பங்​குச் சந்தை 6.09 சசதவீத சரிவை சந்​தித்​துள்​ளது.

x