இந்தியாவுடனான பதற்றம் அதிகரிப்பால் பாகிஸ்தான் பங்குச் சந்தையில் 8,000 புள்ளிகள் வீழ்ச்சி


இஸ்லாமாபாத்: ​காஷ்மீரின் பஹல்​காமில் நடத்​தப்​பட்ட தீவிர​வாத தாக்​குதலை​யடுத்து இந்​தியா மற்​றும் பாகிஸ்​தான் இடையே பதற்​றம் அதி​கரித்​துள்​ளது. இதன் தாக்​கம் ஏப்​ரல் 22-ம் தேதியி​லிருந்து பாகிஸ்​தான் பங்​குச் சந்தை வர்த்​தகத்​தி​லும் எதிரொலித்து வரு​கிறது.

இது​வரை கேஎஸ்​இ-100 குறி​யீடு 8,000 புள்​ளி​கள் வரை வீழ்ச்சி கண்டு முதலீட்​டாளர்​களுக்கு அதிர்ச்​சி​யளித்​துள்​ளது. குறிப்​பாக, ஏப்​ரல் 22 முதல் ஏப்​ரல் 30 வரையி​லான கால​கட்​டத்​தில் மட்​டும் பாகிஸ்​தான் பங்​குச் சந்தை 6.09 சசதவீத சரிவை சந்​தித்​துள்​ளது.

ஏப்​ரல் மாத இறு​தி​நாளான கடந்த புதன்​கிழமை பாகிஸ்​தான் பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் கேஎஸ்​இ-100 ஒரே நாளில் 3.09 சதவீதம் சரிந்​தது. அதாவது 3,545 புள்​ளி​கள் வீழ்ச்சி கண்டு 1,11,326 புள்​ளி​களில் நிலைத்​தது.

முக்​கிய நிறு​வனங்​களான லக், என்க்​ராக், யுபிஎல், பிபிஎல், எப்​எப்சி ஆகிய​வற்​றின் குறி​யீடு 1,132 புள்​ளி​கள் வரை குறைந்​தது. இந்த நிலை​யில், நேற்​றைய வர்த்​தகத்​தில் பாகிஸ்​தான் பங்​குச் சந்​தைகள் கணிச​மான இழப்​பிலிருந்து மீண்டு 2,000-க்​கும் அதி​க​மான புள்​ளி​கள்​ வரை உயர்​ந்​தது.

x