சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5,8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் பெயில் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
புதிய கல்விக்கொள்கை 2020ன் படி 8ம் வகுப்பு வரை அமலில் இருந்த கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பெயிலாக்கும் முறை சிபிஎஸ்இ பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி இருந்த நிலையில், இந்த ஆண்டு மே 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரையிலான விடைத்தாள்கள் திருத்தப்பட்டுவிட்டன. எனவே பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால், இந்த ‘பெயிலாக்கும்’ விதிமுறை அடுத்த ஆண்டில் இருந்தே நடைமுறைக்கு வரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் சிபிஎஸ்இ பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன.