சர்க்கரை நோயாளிகள் பின்பற்றத்தக்க 10 ‘வேண்டும்’கள்!


படம்: மெட்டா ஏஐ

சர்க்கரை நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 ‘வேண்டும்’களை பட்டியலிடுகின்றனர் நீரிழிவு மருத்துவ நிபுணர்கள். அவை...

> நீரிழிவு முற்றிலும் குணமாகாது என்பதால் மாத்திரை, ஊசியோடு வாழக் கற்றுக்கொள்ள ‘வேண்டும்’.

> மாதம் ஒருமுறை சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் ரத்தப் பரிசோதனை, 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்தச் சர்க்கரை சராசரி அளவு சோதனை, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஈசிஜி, நெஞ்சு எக்ஸ்ரே மற்றும் கண் பரிசோதனை போன்ற தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள ‘வேண்டும்’.

> சுய மருத்துவம் கூடவே கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே மருந்துகளைப் பயன்படுத்த ‘வேண்டும்’.

> அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் தவறாமல் நடைப்பயிற்சி செய்ய ‘வேண்டும்’.

> மாவுச்சத்தைத் தவிர்த்து நார்ச்சத்து உணவை அதிகரிக்க ‘வேண்டும்’.

> பழங்களில் முக்கனியைத் தவிர்த்துவிட்டு கொய்யா, நாவல், பப்பாளி, அத்தி அதிகம் சேர்க்க ‘வேண்டும்’.

> கீரைகளில் முருங்கை, அகத்தி, மணத்தக்காளி அதிகம் சேர்க்க ‘வேண்டும்’. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பாலக் கீரையைத் தவிர்க்க ‘வேண்டும்’.

> சிறு தானியங்களைச் சிதைக்காமல் உண்ண ‘வேண்டும்’. கூழ், களி ஆகியவற்றை தவிர்க்க ‘வேண்டும்’.

> உணவுத் தட்டில் காய்கறிகளும் பழங்களும் அதிகமாகவும், சாதம் குறைவாகவும் இருக்க ‘வேண்டும்’.

> தினசரி இரண்டு துண்டு பூண்டை, சாப்பாட்டுடன் சாப்பிட ‘வேண்டும்’. இது, கொழுப்பைத் தவிர்க்க உதவும்.

x