ராமேசுவரம்: உலக நடன தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் கடலுக்கு அடியில் கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரின பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில் சிறுவர், சிறுமி இருவர் நடனமாடினர்.
உலக நடன தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 29-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை ஓஎம்ஆர் காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தருண் ஸ்ரீ (44). இவர் மகள் தாரகை ஆராதனா (11), இவரது மாணவர் அஸ்வின் பாலா (14) ஆகிய இருவரும் நீருக்கடியில் நடனம் ஆடினர்.
இது குறித்து தாரகை ஆராதனா, அஸ்வின் பாலா ஆகியோர் கூறும்போது, “கடல் மாசுபாடு, கடல்வாழ் உயிரின பாதுகாப்பு, நடனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடன நடவடிக்கைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், ராமேசுவரத்தில் உள்ள பாஜ் ஜலசந்தி கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் விழிப்புணர்வு நடனம் மேற்கொண்டோம்” என்று தெரிவித்தனர்.