புதுடெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் நேற்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடன் இருந்தார். பஹல்காம் தாக்குதல் குறித்து அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.