காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இது, ‘காஷ்மீரியத்’ மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று மெஹபூபா முப்தி வன்மையாக கண்டித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரை நம்பி பஹல்காமுக்கு மகிழ்ச்சியாக இருக்க வந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்க து என்று மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முக்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இது அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல. காஷ்மீர் பள்ளத்தாக்கின் வகுப்புவாத நல்லிணக்கம், மத சகிப்புதன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்தும் ‘காஷ்மீரியத்’ மீது நடத்தப்பட்ட தாக்குதல். இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாதது.
சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்காக காஷ்மீர் வெட்கி தலைகுனிகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் உங்களுடன் இருப்போம் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல விரும்பு கிறோம். அவர்களிடம் மன்னிப்பும் கேட்கிறோம். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.