டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் முஸ்தபாபாத் நகரில் உள்ள சக்தி விஹர் என்ற 4 மாடி கட்டிடம் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாவட்ட பேரிடர் நிர்வாக ஆணையத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.
கிரேன்கள், தெர்மல் கேமராக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மீட்புப் பணியின்போது இடிபாடுகளில் இருந்து 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்