மே. வங்கத்தில் 25,000 ஆசிரியர்கள் நீக்கப்பட்டது மாணவர்கள், ஆசிரியர்களை பாதிக்கும்: குடியரசுத் தலைவருக்கு ராகுல் கடிதம்


புதுடெல்லி: மேற்​கு​வங்க மாநிலத்​தில் கடந்த 2016-ம் ஆண்டு 25,000 ஆசிரியர், ஆசிரியர் அல்​லாத பணி​யாளர்​கள் நியமனம் செய்​யப்​பட்​டனர். இந்த நியமனத்​தில் முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதையடுத்து நியமனத்தை கொல்​கத்தா உயர்​நீ​தி​மன்​றம் ரத்து செய்ய உத்​தர​விட்​டது. மேலும் ஆசிரியர்​கள் தாங்​கள் பெற்ற சம்​பளத்தை 12 சதவீத வட்​டி​யுடன் திருப்பி செலுத்​த​வும் உத்​தர​விட்​டது.

25,000 ஆசிரியர்​களை நியமிப்​ப​தற்​காக பணி​யிடங்​கள் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்​த​வும் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் மேற்கு வங்க அரசு மனுத் தாக்கல் செய்​தது. ஆசிரியர் நியமனத்​தில் முறை​கேடு நடை​பெற்​றது உறு​தி​யான​தால், இந்த நியமனத்தை கொல்​கத்தா உயர்​நீ​தி​மன்​றம் ரத்து செய்​தது சரியே என உச்ச நீதி​மன்​றம் சமீபத்​தில் உத்​தர​விட்​டது.

இதுகுறித்து குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்​கு​வங்​கத்​தில் 25,000 ஆசிரியர்​கள் நீக்​கப்​படு​வ​தால், லட்​சக்​கணக்​கான மாணவர்​கள், ஆசிரியர்​கள் இன்றி பாதிக்​கப்​படு​வர். மேலும் இந்த உத்​தர​வு, சேவை செய்​ய​வேண்​டும் என்ற ஆசிரியர்​களின் மனஉறு​தி​யை​யும் பாதிக்​கும். ஆசிரியர் தேர்​வில் முறை​கேடு நடந்​திருந்​தால், அது கண்​டிக்​கத்​தக்​கது. இதற்கு காரண​மானவர்​கள் சட்​டத்​துக்கு முன் கொண்​டு​வரப்பட வேண்​டும்.

ஆனால் முறை​கே​டாக பணி​யில் சேர்ந்த ஆசிரியர்​களுக்கு நிக​ராக, தகு​தி​யான முறை​யில் தேர்வு செய்​யப்​பட்ட ஆசிரியர்​களை​யும் நடத்​து​வது மிகப் பெரிய அநீ​தி. நியாய​மான முறை​யில் தேர்வு செய்​யப்​பட்ட ஆசிரியர்​கள் 10 ஆண்​டு​களுக்கு மேல் பணி​யாற்​றி​யுள்​ளனர். இவர்​களின் பணி நியமனம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தால், லட்​சக்​கணக்​கான மாணவர்​கள் போதிய ஆசிரியர்​கள் இன்றி தவிப்​பர்.

ஆசிரியர்​களின் சேவை மனப்​பான்மை பாதிப்​ப​தோடு, ஆசிரியர்​களின் வரு​மானத்தை நம்​பி​யிருந்த குடும்​பத்​தினரும் பாதிக்​கப்​படு​வர். எனவே, ஆசிரிய​ராக பணி​யாற்​றி​யுள்ள குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, ஆசிரியர்​களின் வேண்​டு​கோளை கருத்​தில் கொண்​டு, தகு​தி​யான முறை​யில் தேர்வு செய்​யப்​பட்ட ஆசிரியர்​கள் தங்​கள் பணியை தொடர மத்​திய அரசை கேட்​டுக்​ கொள்​ள வேண்​டும்​.
இவ்​வாறு அவர் கூறியுள்​ளார்​.

x