கேரள கடற்கரை அருகே உருவான புயல் எச்சரிக்கை... 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!


காற்றழுத்த தாழ்வு நிலை

கேரள கடற்கரை அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மே 25-ம் தேதி காலை மத்திய கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுவடைந்து அன்று மாலையில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது மே 26-ம் தேதி இரவு வங்கதேசம்-மேற்கு வங்கக் கடலோரப் பகுதியில் சாகர் தீவுக்கும் கெபுபாரக் பகுதிக்கும் இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கேரள கடற்கரை அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மிதமானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும். அதன் எச்சரிக்கையின் ஒரு பகுதியாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மே 26-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கேரள கடலோரப் பகுதியில் விழிஞ்சம் முதல் காசர்கோடு வரையிலும், தென் தமிழகக் கடலோரப் பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலும் இன்று இரவு 11.30 மணிக்கு உயரமான அலைகள் மற்றும் புயல் எழ வாய்ப்புள்ளது.

எனவே, மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.

x