ரோஹிங்கியா அகதிகளை அடையாளம் காண ஆந்திர டிஜிபிக்கு பவன் கல்யாண் வலியுறுத்தல்


விஜயவாடா: ஆந்​திர துணை முதல்​வர் பவன் கல்​யாண் நேற்று விஜய​வா​டா​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ரோஹிங்​கியா அகதி​களின் ஊடுரு​வலால் நாட்​டின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டுள்​ளது.

மேலும் உள் நாட்​ட​வருக்​கும் வேலை​வாய்ப்பு பறி​போகிறது. ஆதலால் ஆந்​தி​ரா​வில் ரோஹிங்கியா அகதிகளை அடை​யாளம் கண்டு சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என மாநில டிஜிபிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளேன்.

நாட்​டின் பாது​காப்பு கரு​தி, ஆந்​தி​ரா​வில் தீவிர​வா​தி​களின் நடமாட்​டம், அவர்​களுக்கு உதவி புரிவோரின் நடவடிக்​கைகளை கண்​காணிக்க வேண்​டுமென வலி​யுறுத்​தி​யுள்​ளேன். இவ்​வாறு பவன் கல்​யாண்​ கூறி​னார்​.

x