கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து: ம.பி. அமைச்சர் விஜய் ஷாவின் மன்னிப்பை ஏற்க முடியாது - உச்ச நீதிமன்றம்


புதுடெல்லி: ராணுவ அதி​காரி கர்​னல் சோபியா குரேஷி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ம.பி. அமைச்​சர் விஜய் ஷா மீது வழக்கு பதிவு செய்ய ம.பி. உயர் நீதி​மன்​றம் அண்​மை​யில் உத்​தர​விட்​டது. இந்த வழக்கை ரத்து செய்​யக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் விஜய் ஷா மனு தாக்​கல் செய்​தார்.

அவரது மனு நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், என்​.கோடீஸ்​வர் சிங் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அமைச்​சரின் கருத்​தால் ஒட்​டுமொத்த நாடும் வெட்​கப்​படு​கிறது என்று நீதிப​தி​கள் கூறினர். விஜய் ஷா மன்​னிப்பு கோரி​யுள்​ள​தாக அவரது வழக்​கறிஞர் கூறியதை நீதிப​தி​கள் ஏற்​க​வில்​லை.

“எந்த வகை​யாக மன்​னிப்பை அவர் கோரி​யுள்​ளார் என நாங்​கள் பார்க்க வேண்​டி​யுள்​ளது. சில நேரங்​களில் விளைவு​களில் இருந்து தப்​பிக்க மட்​டும் மன்​னிப்பு கோரலாம் அல்​லது முதலைக்​கண்​ணீர் வடிக்​கலாம். அவர் உண்​மை​யான மன்​னிப்பு கோர வேண்​டும்” என்று நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து அமைச்​சருக்கு எதி​ரான வழக்கை விசா​ரிக்க செவ்​வாய்க்​கிழமைக்​குள் (இன்​றுக்​குள்) சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்க ம.பி. அரசுக்கு உத்​தர​விட்​டனர்.

“இக்குழு​வில் பிற மாநிலத்தை சேர்ந்த 3 ஐபிஎஸ் அதி​காரி​கள் இடம்​பெற வேண்​டும். அதில் ஒரு​வர் பெண் அதி​காரி​யாக இருக்க வேண்​டும். வரும் 28-ம் தேதிக்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய அக்​குழு கேட்​டுக்​கொள்​ளப்பட வேண்​டும். இந்த வழக்கை உச்ச நீதி​மன்​றம் உன்​னிப்​பாக கண்​காணிக்​கும்” என்​று நீதிப​தி​கள்​ தெரி​வித்​தனர்​.

x