பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்


புதுடெல்லி: ​பாகிஸ்​தான் விவ​காரத்​தில் 3-ம் தரப்​புக்கு இடமில்லை என்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக டெல்​லி​யில் நேற்று அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு ஆபரேஷன் சிந்​தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுக்​கப்​பட்டு இருக்​கிறது. பாகிஸ்​தான் விவ​காரத்தை பொறுத்​தவரை இந்​தி​யா​வின் நிலைப்​பாட்​டில் எந்த மாற்​ற​மும் கிடை​யாது. இது இருதரப்பு விவ​காரம். இதில் 3-ம் தரப்​புக்கு இடமில்​லை.

தீவிர​வாதம் பற்றி... தீவிர​வாதம் குறித்து மட்​டுமே பாகிஸ்​தானுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி ஏற்​கெனவே தெளிவுபடுத்தி உள்​ளார். இந்​தி​யா​வுக்கு எதி​ராக சதி வேலைகளில் ஈடு​பட்ட தீவிர​வா​தி​கள் பாகிஸ்​தானில் பதுங்கி உள்​ளனர்.

அவர்​களின் பட்​டியலை பாகிஸ்​தானிடம் வழங்கி உள்​ளோம். அந்த தீவிர​வா​தி​களை இந்​தி​யா​விடம் ஒப்​படைக்க வேண்​டும். பாகிஸ்​தானில் செயல்​படும் தீவிர​வாத முகாம்​களை மூட வேண்​டும். ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்​தான் வெளி​யேற வேண்​டும். இதுகுறித்து பாகிஸ்​தானுடன் பேச்​சு​வார்த்தை நடத்த தயா​ராக உள்​ளோம். இவ்​வாறு அமைச்​சர் ஜெய்​சங்​கர்​ தெரி​வித்​துள்​ளார்​.

x