நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்த ராகுல் வலியுறுத்தல்


புதுடெல்லி: பிஹாரின் தர்​பங்​கா​வில் உள்ள அம்​பேத்​கர் விடு​தி​யில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று மாணவர்​களு​டன்
கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர் பேசுகை​யில், “நாட்​டில் தனி​யார் கல்வி நிறு​வனங்​களுக்​கும் இடஒதுக்​கீட்டை விரிவுபடுத்த வேண்​டும் என காங்​கிரஸ் கட்சி கோரி வரு​கிறது. இது தொடர்​பாக அரசுக்கு அழுத்​தம் கொடுப்​போம்.

கோரிக்கை நிறு​வேறும் வரை எங்​கள் போராட்​டம் தொடரும். இங்​குள்ள அரசு, தலித்​துகள், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், சிறு​பான்​மை​யினர் மற்றும் பழங்​குடி​யினருக்கு எதி​ராக செயல்​படு​கிறது. நாடு முழு​வதும் சாதி​வாரி கணக்​கெடுப்பு மேற்​கொள்​ளும்​போது, தெலங்​கானா அரசு மேற்​கொண்ட முறையை மத்​திய அரசு பின்​பற்ற வேண்​டும்” என்​றார்.

அம்​பேத்​கர் விடு​தி​யில் மாணவர்​களு​டன் கலந்​துரை​யாட ராகுல் காந்​திக்கு அனு​மதி வழங்​கப்​பட​வில்​லை. என்​றாலும் அதன் வளாகத்​தில் நுழைந்து மாணவர்​களு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார்.

x