எல்லையில் இயல்பு நிலை திரும்பியதால் 32 விமான நிலையம் மீண்டும் திறப்பு


புதுடெல்லி: இந்​தி​யா, பாகிஸ்​தான் எல்​லைப் பகு​தி​யில் இயல்பு நிலை திரும்​பத் தொடங்​கி​யிருப்​ப​தால் மூடப்​பட்​டிருந்த 32 விமான நிலை​யங்​கள் மீண்​டும் திறக்கப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக இந்​திய விமான நிலைய ஆணை​யம்​(ஏஏஐ) நேற்று காலை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: எல்​லை​யில் ஏற்​பட்ட பதற்​றம் காரண​மாக மூடப்​பட்​டிருந்த, 32 விமான நிலை​யங்​களும் இப்​போது சிவில் விமான போக்​கு​வரத்​துக்கு திறக்​கப்​பட்​டுள்​ளன.

பயணி​கள் விமான நிறு​வனங்​களு​டன் நேரடி​யாக விமானங்​களின் இயக்​கம் குறித்து சரி​பார்த்​து, சேவையைப் பயன்​படுத்​திக் கொள்ள விமான நிறு​வனத்​தின் வலை​தளங்​களைக் கண்​காணிக்க பரிந்​துரைக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. மூடப்​பட்​டிருந்த ஆதம்​பூர், அம்​பாலா, அமிர்​தசரஸ், அவந்​திபூர், பதிண்​டா, புஜ், பிகானீர், சண்​டிகர், ஹல்​வா​ரா, ஹிண்​டன், ஜெய்​சால்​மர், ஜம்​மு, ஜாம்​நகர், ஜோத்​பூர், கண்ட்​லா, காங்ரா (காகல்), கேஷோட், கிஷன்​கர், குலு மணாலி (பூந்​தர்), லே, லூதி​யா​னா, முந்த்​ரா, நாலி​யா, பதான்​கோட், பாட்​டி​யாலா, போர்​பந்​தர், ராஜ்கோட் (ஹி​ராசர்), சர்​சா​வா, சிம்​லா, நகர், தோய்​ஸ், உத்​தர்​லாய் ஆகிய 32 விமான நிலை​யங்​கள் தற்​போது மீண்​டும் சிவில் விமான போக்​கு​வரத்​துக்​காக திறக்​கப்​பட்​டுள்​ளன.

முன்​ன​தாக, இந்​தியா - பாகிஸ்​தான் இடையே அதி​கரித்த பதற்​றம் காரண​மாக நாட்​டின் வடக்கு மற்​றும் மேற்​குப் பகு​தி​களில் உள்ள இந்த 32 விமான நிலை​யங்​களில் சிவில் விமானப் போக்​கு​வரத்து நடவடிக்​கைகள் தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டிருந்​தன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

x