உ.பி.யில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் சூட்டிய பெற்றோர்


குஷிநகர்: உ.பி.​ மாநிலம் குஷிநகர் மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் ஆர்​.கே.ஷாஹி கூறிய​தாவது: கடந்த 10, 11-ம் தேதி​களில் குஷிநகர் மருத்​து​வ​மனை​யில் 17 பெண் குழந்​தைகள் பிறந்​தன. அந்த குழந்​தைகள் அனை​வருக்​கும் சிந்​தூர் என பெயரிடப்​பட்​டுள்​ளது. மத்​திய அரசின் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைக்கு மக்​களிடையே பெரும் வரவேற்பு உள்​ளது.

இந்​நிலை​யில் 17 பெண் குழந்​தைகளுக்கு சிந்​தூர் என்று அவர்​களது பெற்​றோரும், உறவினர்​களும் பெயர்​சூட்டி மகிழ்ந்​தனர். இவ்​வாறு அவர் கூறினார். மருத்​து​வ​மனை​யில் பிறந்த ஒரு பெண் குழந்​தை​யின் தாயான அர்ச்​சனா என்​பவர் கூறும்​போது, "தற்​போது சிந்​தூர் என்​பது ஒரு வார்த்​தை​யாக மட்​டுமல்​லாமல் மக்​களின் உணர்​வாக மாறி​விட்​டது" என்​றார்.

x