ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்: காங். தலைவர் ராகுல் வலியுறுத்தல்


புதுடெல்லி: ​காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, பிரதமர் மோடிக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ராகுல் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில், ‘‘இந்​தியா - பாகிஸ்​தான் இடையே போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத்தை உடனடி
​யாக கூட்ட வேண்​டும் என எதிர்க்​கட்​சிகள் ஒரு​மன​தாக வேண்​டு​கோள் விடுக்​கின்​றன.

ஆபரேஷன் சிந்​தூர் மற்​றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பால் முதலில் அறிவிக்​கப்​பட்ட போர் நிறுத்​தம் குறித்து மக்​களுக்​காக எம்​.பி.க்​கள் விவா​திக்க வேண்​டியது முக்​கி​யம். நாம் எதிர்​நோக்​கி​யுள்ள சவால்​களுக்​கு, நாம் இணைந்து தீர்வு காண இது ஒரு வாய்ப்​பாக இருக்​கும். இந்த கோரிக்​கையை நீங்​கள் உடனடி​யாக பரிசீலிப்​பீர்​கள் என நம்​பு​கிறேன்’’ என கூறி​யுள்​ளார்.

மல்​லி​கார்​ஜுன கார்கே எழு​தி​யுள்ள கடிதத்​தில், ‘‘தற்​போது போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​பட்ட சூழலில், ஆபரேஷன் சிந்​தூர், அமெரிக்கா முதலில் அறி​வித்த போர் நிறுத்​தம் பற்றி விவா​திக்க நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத்தை கூட்ட வேண்​டும் என்று மாநிலங்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் என்ற முறை​யில், அதே வேண்​டு​கோளுக்​காக நானும் உங்​களுக்கு கடிதம் எழுதுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

x