பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்


புதுடெல்லி: இந்​தி​யா, பாகிஸ்​தான் போர் நிறுத்த அறி​விப்பு வந்​துள்​ளதையடுத்து பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் அனைத்​துக் கட்​சிக்கூட்​டத்தை நடத்​தவேண்​டும் என்று காங்​கிரஸ் கட்சி வலி​யுறுத்​தி​உள்​ளது.

இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே கடந்த 4 நாட்​களாக நடை​பெற்று வந்த தாக்​குதல் நேற்று மாலை முடிவுக்கு வந்​தது. இந்நிலையில் கட்​சி​யின் மூத்த தலை​வரும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான ஜெய்​ராம் ரமேஷ் கூறிய​தாவது: இந்​தியா மற்​றும் பாகிஸ்​தான் இடையே​யான சண்டை நிறுத்​தத்தை அமெரிக்கா அறி​வித்து இருப்​பது வரலாற்​றில் இது​வரை இல்​லாத ஒன்​று.

போர் நிறுத்த அறி​விப்பு வந்​துள்ள நிலை​யில், பிரதமர் மோடி, அனைத்​துக்​கட்சி கூட்​டத்தை உடனே கூட்​ட​வேண்​டும். கூட்​டத்​தில் நாட்​டின் பாது​காப்பு குறித்த விவ​காரத்​தில் அனைத்து கட்​சிகளின் கருத்​துகளை​யும் பிரதமர் மோடி கேட்​டறிய வேண்​டும்.

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் குறித்து விவா​திக்க நாடாளு​மன்​றத்​தில் சிறப்பு கூட்​டத்தை கூட்ட வேண்​டும். இவ்​வாறு ஜெய்​ராம் ரமேஷ் கோரிக்​கை விடுத்​துள்​ளார்​.

x