‘பாக். ராணுவ கிடங்குகள் சேதம்’ - கர்னல் சோபியா குரேஷி: பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அந்நாட்டின் ராணுவ தளங்கள், ரேடார் தளங்கள், ஆயுதக் கிடங்குகளை இந்திய ராணுவம் தாக்கியது. இதன்மூலம், குறைந்தபட்ச இழப்புகளை உறுதி செய்ததது. பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளுக்கு தங்கள் படைகளை நகர்த்துவதை இந்திய ராணுவம் கண்டறிந்தது என கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஏவுதளங்களை வெற்றிகரமாக அழித்துள்ளதாக அறிவித்துள்ள இந்திய ராணுவம் அதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் அதிரடியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளின் இயங்குதிறனுக்கு பலத்த அடியாக இறங்கியுள்ளது என ராணுவம் சார்பில் கூறப்படுகிறது.
ஜெய்சங்கரிடம் மார்கோ ரூபியோ வலியுறுத்தல்: இந்தியா பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அழைத்துப் பேசிய அமெரிக்க வெளியுறுவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, தவறான புரிதல்களைத் தவிர்த்து இரண்டு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து, நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். எதிர்கால சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என வலியுறுத்தியுள்ளார்.
‘பாக். ராணுவம் துருப்புக்களை நகர்த்துகிறது’ - வியோமிகா சிங்: பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையை நோக்கி தனது துருப்புக்களை நகர்த்தி வருகிறது. இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கம் கொண்ட தாக்குதலை குறிக்கிறது. இந்திய ஆயுதப்படைகள் உச்சபட்ச தயார் நிலையில் உள்ளன. அனைத்து விரோத நடவடிக்கைகளும் திறம்பட எதிர்கொள்ளப்பட்டு, விகிதாச்சார ரீதியாக பதிலளிக்கப்பட்டுள்ளன என விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
‘பாகிஸ்தானால் வெற்றிபெற முடியாது’ - சசி தரூர்: காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், இந்தியா ஒரு நிலையான சக்தி. பாகிஸ்தானிடம் உள்ள எதையும் அது விரும்பவில்லை. இன்னும் 30 ஆண்டுகள் முயன்றாலும் பாகிஸ்தானால் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
OPERATION SINDOOR
Indian Army Pulverizes Terrorist Launchpads
As a response to Pakistan's misadventures of attempted drone strikes on the night of 08 and 09 May 2025 in multiple cities of Jammu & Kashmir and Punjab, the #Indian Army conducted a coordinated fire assault on… pic.twitter.com/2i5xa3K7uk— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 10, 2025