ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டம் வழியாக எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை


புதுடெல்லி: ஜம்​மு-​காஷ்மீரின் சம்பா மாவட்​டம் வழி​யாக இந்​திய எல்​லைக்​குள் ஊடுரு​வ முயன்ற 7 தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொள்ளப்பட்டனர்
இதுதொடர்​பாக எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்​எப்) மூத்த அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “பாகிஸ்​தானின் தாண்​டர் பகு​தி​யில் இருந்து அங்​குள்ள துருப்​பு​கள் நடத்​திய துப்​பாக்​கிச்​சூட்​டினை பயன்​படுத்தி பெரிய அளவி​லான தீவிர​வா​தி​கள் குழு ஒன்று இந்​திய எல்​லைக்​குள் ஊடுருவ முயற்சி செய்​தது. இருந்​த​போதும் விழிப்​புடன் இருந்த எல்​லைப் பாது​காப்​புப் படை​யினர், மிகப்​பெரிய இந்த ஊடுரு​வல் முயற்​சி​யைத் தடுத்​தனர்.


இந்த சம்​பவத்​தின்​போது பாகிஸ்​தானைச் சேர்ந்த 7 தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இதன்​மூலம் பாகிஸ்​தான் தரப்​புக்கு பெரும் சேதம் விளைவிக்​கப்​பட்​டது. தொடர் கண்​காணிப்​பு​களால் ஊடுரு​வல்​காரர்​களின் நடமாட்​டம் கண்​டறியப்​பட்​டது. உடனடி​யாக பிஎஸ்​எஃப் நடவடிக்​கை​யில் ஈடு​பட்டு ஊடுரு​வல் முயற்​சி​யைத் தடுத்​தது. இதைத் தொடர்ந்து அந்​தப் பகு​தி​யில் தேடு​தல் வேட்டை நடத்​தப்​பட்​டு வரு​கிறது” என்​றார்​.

x