புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டம் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொள்ளப்பட்டனர்
இதுதொடர்பாக எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாகிஸ்தானின் தாண்டர் பகுதியில் இருந்து அங்குள்ள துருப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டினை பயன்படுத்தி பெரிய அளவிலான தீவிரவாதிகள் குழு ஒன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்தது. இருந்தபோதும் விழிப்புடன் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், மிகப்பெரிய இந்த ஊடுருவல் முயற்சியைத் தடுத்தனர்.
இந்த சம்பவத்தின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்மூலம் பாகிஸ்தான் தரப்புக்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டது. தொடர் கண்காணிப்புகளால் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. உடனடியாக பிஎஸ்எஃப் நடவடிக்கையில் ஈடுபட்டு ஊடுருவல் முயற்சியைத் தடுத்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.