எல்லையில் 26 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான் ட்ரோன்கள்: பாரமுல்லா முதல் பூஜ் வரை பாதிப்பு


காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத்தின் பூஜ் வரையிலான 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோடா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதன்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், புஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்கள் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களால் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில் ஒரு குடியிருப்புப் பகுதியில் ஆயுதமேந்திய ட்ரோன் ஒன்று தாக்கியதில், ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, அந்தப் பகுதி பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

இதற்கிடையில், இந்திய ஆயுதப்படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன, மேலும் இதுபோன்ற அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களும் கண்காணிக்கப்பட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

எல்லைப் பகுதிகளில் உள்ள குடிமக்கள், வீட்டிற்குள்ளேயே இருக்கவும், தேவையற்ற நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றவும், பீதி தேவையில்லை என்றாலும், அதிக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை அவசியம் என்றும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x