எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு


புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் நேற்று அதிகாலை, ஆபரே ஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத் தினர்.

இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி களில்(எல்ஓசி) உள்ள கிராமங்களில் பாகிஸ் தான் ராணுவத்தினர் நேற்று அதிகாலை சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் வெடிகுண்டுகளையும் அவர்கள் வீசி தாக்கினர்.
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பூஞ்ச், பாரமுல்லா, உரி, ரஜவுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். தாக்குதலில் துப்பாக்கிக் குண்டு காயமடைந்து 15 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த 43 பேர் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்கு தல் நடத்தி வரும் நிலையில், அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று அழைப்பு விடுத்தார். எல்லைப் பகுதிகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சைஅளிப்பதை உறுதி செய்யவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

x