பஹல்காம் தாக்குதல் நடந்த பகுதியில் ‘புல்லட் ஃப்ரூப்’ உடையுடன் இருந்த சந்தேக நபர் கைது!


கோப்புப்படம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகே சந்தேகத்துக்கு உரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு படையினர் அவரை பிடித்த போது குண்டு துளைக்காத புல்லட் ஃப்ரூப் ஆடையை அவர் அணிந்திருந்தார்.

அவரை பாதுகாப்பு படையினர் பிடித்த போது முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்துள்ளார். பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள காட்டுப்பகுதியில் திங்கள்கிழமை அன்று பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்ட போது அவர் பிடிபட்டதாக தகவல். அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபரின் பெயர் அகமது பிலால் என தெரியவந்துள்ளது.

மேலும், புல்லட் ஃப்ரூப் ஆடையை எங்கிருந்து பெற்றார் என்ற கேள்விக்கு அவர் முறையான விளக்கம் எதுவும் தரவில்லை என தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அகமது பிலாலை உள்ளூர் போலீசாரிடம் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்துள்ளனர். அவருக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் எல்லாம் கட்டுப்பாட்டுக் கோட்டை அத்துமீறி தாண்டிய பாகிஸ்தானை சேர்ந்த 26 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவரை இன்று (மே 6) அதிகாலை கைது செய்யப்பட்டதாக தகவல்.

கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

x