பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை? - பாதுகாப்புத் துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை


புதுடெல்லி: பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு பாகிஸ்​தானுக்கு எதி​ரான நடவடிக்​கைகள் குறித்து பாது​காப்​புத் துறை செயலருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலில் பாகிஸ்​தானுக்கு நேரடி தொடர்பு இருப்​ப​தாக மத்​திய அரசு குற்​றம் சாட்டி வரு​கிறது. இந்​நிலை​யில், தீவிர​வாதத்​துக்கு எதி​ராக இந்​தியா எடுக்​கும் நடவடிக்​கைகளுக்கு முழு ஆதரவு அளிப்​போம் என்று அமெரிக்​கா, பிரான்​ஸ், பிரிட்​டன், இஸ்​ரேல் உள்​ளிட்ட பல நாடு​கள் தெரி​வித்​துள்​ளன.

‘‘தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​கள், அவர்​களுக்கு உதவிய​வர்​கள் மீது இந்​தியா கடும் நடவடிக்கை எடுக்​கும். அந்த நடவடிக்கை அவர்​கள் இது​வரை கற்​பனை செய்து கூட பார்க்க முடி​யாத​தாக இருக்​கும்’’ என்று பிரதமர் மோடி திட்​ட​வட்​ட​மாக எச்​சரித்​துள்​ளார். அதற்​கேற்ப முதல் கட்​ட​மாக சிந்து நதிநீர் பகிர்வு ஒப்​பந்​தம் ரத்​து, பாகிஸ்​தானியர்​கள் விசா ரத்​து, வர்த்தக ஏற்​றுமதி இறக்​கும​திக்கு தடை உள்​ளிட்ட பல்​வேறு நடவடிக்​கைகளை மத்​திய அரசு எடுத்​துள்​ளது. அத்​துடன் பாகிஸ்​தானில் உள்ள இந்​திய தூதரகத்​தில் பணி​யாற்​றும் அதி​காரி​களில் பலர் திரும்ப இந்​தி​யா​வுக்கு அழைக்​கப்​பட்​டனர். அதே​போல் இந்​தி​யா​வில் உள்ள பாகிஸ்​தான் அதி​காரி​கள் பலரை திரும்பி பாகிஸ்​தானுக்கு செல்ல மத்​திய அரசு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், இந்​தியா - பாகிஸ்​தான் இடையே போர்ப் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வின் முப்​படைகளும் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. போர் விமானங்​கள், போர்க் கப்​பல்​கள் ஒத்​தி​கை​யில் ஈடு​பட்​டுள்​ளன. மேலும், பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோ​சனை நடத்தி வரு​கிறார். விமானப் படை தளபதி மார்​ஷல் அமர் பிரீத் சிங்கை நேற்​று​முன்​தினம் பிரதமர் மோடி சந்​தித்து விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார். அதன் அடுத்த கட்​ட​மாக பாது​காப்​புத் துறை செயலர் ராஜேஷ் குமார் சிங்கை நேற்று டெல்​லி​யில் சந்​தித்து பிரதமர் மோடி ஆலோ​சனை நடத்​தி​னார். இந்த சந்​திரப்பு அரை மணி நேரத்​துக்கு மேல் நீடித்​தது. தவிர ராணுவம், கப்​பல் படை, விமானப் படை தளப​தி​கள் மற்​றும் முக்​கிய உயர​தி​காரி​களை பிரதமர் மோடி அடுத்​தடுத்து சந்​தித்து ஆலோ​சனை நடத்​துகிறார்.

x