புதுடெல்லி: தற்போதைய வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் என்ற பகுதியில், கடந்த 1896-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிறந்தவர் பாபா சிவானந்த். ஓம்கார்னந்த் என்பவரால் வளர்க்கப்பட்டார். எளிமையாகவும் ஒழுக்கமாகவும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பாபா சிவானந்த், யோகா மற்றும் ஆன்மிக சேவையில் ஈடுபட்டார்.
அவரது சேவையைப் பாராட்டி 2022-ம் ஆண்டு மத்திய அரசு பத்ம விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் பாபா சிவானந்த் வயது முதிர்வு காரணமாக உத்தர பிரதேச மாநிலம் வாராணசி பிஎச்யு மருத்துவமனையில் கடந்த சனிக் கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 128.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு முறைப்படி நேற்று இறுதிச் சடங்கு நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.