சொந்த மக்கள் நாடு திரும்ப வாகா எல்லையை திறந்தது பாகிஸ்தான்


புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானியர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 911 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக நாடு திரும்பினர். இதுபோல் 1,617 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இதையடுத்து இரு நாடுகள் தரப்பிலும் எல்லை மூடப்பட்டது.

எனினும் காலக்கெடுவுக்குள் நாடு திரும்ப முடியாமல் அட்டாரி எல்லையில் பாகிஸ்தானியர்கள் பலர் சிக்கித் தவித்தனர். இதையடுத்து இவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நேற்று முன்தினம் நீட்டித்தது. பாகிஸ்தானும் நேற்று தனது குடிமக்கள் நாடு திரும்புவதற்காக வாகா எல்லையை திறந்தது. பாகிஸ்தானியர்கள் எல்லையை கடக்க அனுமதிக்கும் வரை வாகா எல்லை திறந்திருக்கும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

x