ராணுவத்தின் மன உறுதியைக் குலைக்காதீர்கள்: பஹல்காம் தாக்குதல் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


புதுடெல்லி: பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரிக்க நீதித்துறை ஆணையத்தை அமைக்க கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அத்தகைய நடவடிக்கை பாதுகாப்பு படைகளின் மன உறுதியைக் குலைக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரிக்க நீதித்துறை ஆணையத்தை அமைக்க கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், “இதுபோன்ற பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு முன் பொறுப்புடன் இருங்கள். உங்கள் நாட்டிற்காக உங்களுக்கு சில கடமைகள் உள்ளன. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஒவ்வொரு இந்தியரும் கைகோர்த்திருக்கும் முக்கியமான நேரம் இது. படைகளை மன உறுதியைக் குலைக்காதீர்கள். இந்த மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்பு இப்பிரச்சினையின் "உணர்ச்சித்தன்மையை" ஆராய்ந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

மனுதாரர்களை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்ற நீதிபதி."நாங்கள் எப்போதிலிருந்து விசாரணை நிபுணத்துவத்தைப் பெற்றுள்ளோம்? ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் விசாரணை நடத்தச் சொல்கிறீர்கள். அவர்கள் தீர்ப்பளிக்க மட்டுமே முடியும். எங்களை உத்தரவு பிறப்பிக்கச் சொல்லாதீர்கள்" என்று மனுதாரரைக் கண்டித்தனர்

x