கொல்கத்தா ஓட்டலில் தீ விபத்து குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு


கொல்கத்தா: ​​கொல்​கத்​தா​விலுள்ள ஒரு ஓட்​டலில் ஏற்​பட்ட தீவிபத்​தில் பெண், 2 குழந்​தைகள் உட்பட 14 பேர் உயி​ரிழந்​தனர். இதில் 3 பேர் சென்​னையைச் சேர்ந்​தவர்​கள். மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்​கத்​தா​வின் மத்​தி​யப் பகு​தி​யில் புர்​ராபஜார் மெச்​சு​வாபட்டி என்ற பகுதி உள்​ளது. இந்​தப்​பகு​தி​யில் ரித்​து​ராஜ் என்ற ஓட்​டல் அமைந்​துள்​ளது.

இந்த ஓட்​டலில் நேற்று இரவு 8.15 மணி​யள​வில் தீ ஏற்​பட்​டது. தீ மளமளவென பரவிய​தால் ஓட்​டலில் தங்​கி​யிருந்​தோர் பயத்​தில் அலறியடித்​துக் கொண்டு ஓடினர். மாடிப் பகு​தி​யிலுள்ள அறை​களில் தங்கி இருந்​தவர்​கள் பலரும் வேக​மாக வெளி​யேற தொடங்​கினர்.

தகவல் அறிந்து தீயணைப்​புத்​துறை​யினர் சம்பவ இடத்​திற்கு விரைந்​தனர். தீயை அணைக்​கும் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்​டனர். பல மணி நேர போராட்​டங்​களுக்கு பின்​னர் தீ கட்​டுக்குள் கொண்டு வரப்​பட்​டது. இதனையடுத்து ஓட்​டலுக்​குள் சென்று தீயணைப்பு வீரர்​கள் சோதனை செய்​தனர். அப்​போது தீயில் கரு​கிய நிலை​யில் 13 பேரின் உடல்​களை அதி​காரி​கள் மீட்​டனர்.

இதில் ஒரு பெண், 2 குழந்​தைகளும் அடங்​கு​வர். தீயில் இருந்து தப்​பிக்க ஹோட்​டல் ஊழியர் ஒரு​வர் மாடி​யில் இருந்து கீழே குதித்​த​தில் உயி​ரிழந்​தார். இதையடுத்து உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 14-ஆக உயர்ந்​தது. உயி​ரிழந்த 14 பேரில் 3 பேர் சென்​னையை சேர்ந்​தவர்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்த விபத்து தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு(எஸ்​ஐடி) வி​சா​ரணை நடத்​தும்​ நடத்​தும்​ என்​று கொல்​கத்​தா போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

x