திருப்பதி அருகே பயங்கர விபத்து - தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்


திருப்பதி: திருப்பதி அருகே லாரி மீது கார் மோதிய சாலை விபத்தில் ஓசூரை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

ஓசூரை சேர்ந்தவர் 7 பேர் காரில் திருப்பதிக்கு சாமி தரிசனத்துக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பதி அருகே பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை சாலையில் கன்டெய்னர் லாரி பின்புறம், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் 2 பெண்கள், 2 ஆண்கள் ஒரு சிறுவன் என 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

x