டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் 5,000 பேரை வெளியேற்ற நடவடிக்கை


புதுடெல்லி: காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து டெல்லியில் வசிக்கும் 5,000 பாகிஸ்தானியர்களின் விவரங்களை வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகம் (எப்ஆர்ஆர்ஓ) , டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவிடம் வழங்கியுள்ளது. மேலும், அவர்களது விவரங்களை சரிபார்க்கவும், அடையாளம் காணவும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இந்த விவரங்களை எப்ஆர்ஆர்ஓ கொடுத்துள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக அவர்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளோம். இந்த விவகாரத்தில் வேகமாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்" என்றார்.

x