அரபிக் கடலில் ஏவுகணை சோதனை: போருக்கு தயார் நிலையில் இந்திய கடற்படை


அரபிக் கடலில் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை.

புதுடெல்லி: காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்தலாம் என கருதி போருக்கு தயாராகி வருகிறது பாகிஸ்தான். இந்நிலையில் அரபிக் கடலில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் போர் கப்பல் கடந்த வியாழக்கிழமை ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.

முதலில் நடுத்தர ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் (எம்ஆர்-எஸ்ஏஎம்) சோதனை செய்யப்பட்டன. அதன்பின் எதிரிநாட்டு போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன. இந்த ஏவுகணைகள் இஸ்ரேலுடன் இணைந்து கூட்டாக தயாரிக்கப்பட்டவை. இது 70 கி.மீ தூரத்தில் எதிரிகளின் இலக்கை தாக்கும். இந்த ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தன.

x