மாணவர்கள் கட்டணங்களை யுபிஐ, க்யூஆர் கோடு மூலமாக செலுத்துவதற்கான வசதிகளை வளாகத்தில் பல்கலை.கள், கல்லூரிகள் ஏற்படுத்த வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: டிஜிட்டல்சார்ந்த அறிவாற்றாலை சமூகத்தில் அனைவரும் பெற்று கொள்ளும் நோக்கத்துடனும், அறிவுசார் பொருளாதார த்தை மேம்படுத்தவும் மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. பண பரிமாற்றத்தை குறைத்து அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய தொலை நோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது நம்நாட்டில் யுபிஐ பாதுகாப்பான, விரைவான பணப் பரிமாற்றத்தையும் உறுதி செய்கிறது. இதற்கிடையே கிராமப் புற கல்வி நிலையங்களில் மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பாடப் புத்தகங்கள் உட்பட பல்வேறு கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்து வதை விரும்புகின்றன. இது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. எனவே, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் கல்வி சார்ந்த பணப் பரி மாற்றங்களை மாணவர்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக எளிதில் கையாளும் வகையில் யுபிஐ ‘க்யூஆர் கோடு’ வசதிகளை வளாகத்தில் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.