திருப்பூர் விவசாயியின் மகள் சாதனை: யுபிஎஸ்சி தேர்வில் 2-வது முயற்சியில் 617-வது இடம்!


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே வெறுவேடம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திர சேகர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இருவரும் விவசாயிகள். இவர்களது மகள் ச.மோகன தீபிகா (23). தற்போது வெளியாகியுள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் 617-வது இடத்தை மோகன தீபிகா பிடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “கடந்த 2023ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை எழுதி வந்தேன். தொடர்ந்து ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றேன். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பயிற்சி மையம் மற்றும் அகாடமியில் பாடங்களை எளிமையாக கற்றுத் தந்தனர்.

2-வது முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். தமிழக அரசு சார்பில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஏப்.25) நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

x