பாபநாசம் படுகை புதுத் தெருவைச் சேர்ந்த விவசாயி புண்ணியமூர்த்தி. இவரது மகள் ஆர்த்திகா (17), பாபநாசத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
தேர்வு முடிவு எப்படி இருக்குமோ என மன உலைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், ஆர்த்திகா 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.