பிஇ, பிடெக் மாணவர் சேர்க்​கைக்கு விண்​ணப்ப பதிவு நாளை தொடக்​கம்


தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை தொடங்குகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்த கலந்தாய்வை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், 2025-26-ம் கல்வி ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் காலை 10 மணிக்கு ஆன்லைன் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் துறை செயலர் சமயமூர்த்தி, மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது

x