திருச்சி: திருப்பராய்த்துறையில் செயல்படும் ஸ்ரீராமகிருஷ்ண குடில் சார்பில், பெற்றோர் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த சிறார்கள், இலவச கல்வி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பராய்த் துறையில் 1948ம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ண குடில் தொடங்கப்பட்டு, 75 ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்ற சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்கு சேவை செய்து வருகிறது. இந்த ஆசிரமத்தில் உண்டு உறைவிடத்துடன் கூடிய தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளியில் தாய், தந்தை என இருவரையுமோ அல்லது தாய் அல்லது தந்தையையோ இழந்த மற்றும் ஆதரவற்ற 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் சிறார்களை சேர்க்க முடியும்.
இங்கு கல்வி மட்டுமின்றி அவரவர் பணிகளை அவர்களே செய்து கொள்ள பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும், ஓவியம், நாடகம், யோகா, கணினி ஆகிய பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இப்பள்ளியில் சேர்ந்து பயில விரும்பும் ஆதரவற்ற சிறார்கள் ஸ்ரீராமகிருஷ்ண குடில், திருப்பராய்த் துறை, திருச்சி மாவட்டம்- 639115 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0431-2614235, 83001-33766, 63837-16578 ஆகிய எண்களிலோ தொடர்புக் கொள்ளலாம்.
இங்கு 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், அரசு ஐடிஐ-ல் சேர்ந்து கல்வி பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன்படி, 10ம் வகுப்பில் 400 மதிப் பெண்கள் எடுத்த மாணவர்கள், சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராம கிருஷ்ண மிஷன் கல்லூரியில், பாலிடெக்னிக் படிப்பில் சேர்க்கப்பட்டு பட்டயப் பொறியாளர்க ள் ஆக்கப்படுகின்றனர்.