சிவகாசி: பொதுமக்கள் எதிர்ப்பால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தம்


சிவகாசி: செங்கமல நாச்சியார்புரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அலைபேசி கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் விவேகானந்தர் காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் அலைபேசி தொலை தொடர்பு கோபுரம் அமைந்துள்ளது. இந்நிலையில் அதன் அருகே மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பகுதியில் ஏற்கனவே அலைபேசி கோபுரம் உள்ள நிலையில், மேலும் ஒரு கோபுரம் அமைப்பதால் பாதிப்பு ஏற்படும் எனக் கூறிய பொதுமக்கள் அலைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த திருத்தங்கல் போலீஸார் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அலைபேசி கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

x