சமூக வலைதளங்களில் பெண்களின் படங்களை திருடி மார்பிங் செய்தவர் கைது: புதுச்சேரி அதிர்ச்சி


புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் புகைப்படம் மர்மநபரால் மார்பிங் செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், தென்காசி அருகே வீர சிகாமணியைச் சேர்ந்த மனோகர் (23) என்பவர் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக ஊடகங்களில் பரப்புவது தெரியந்தது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் தென்காசிக்கு சென்று மனோகரை கைது செய்து புதுச்சேரி்க்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சமூக வலைத் தளங்களில் உள்ள பெண்களின் புகைப்படங்களை திருடி அதனை மார்பிங் செய்து இணையதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பாலியல் சேவை உள்ளதாக குறிப்பிட்டு, க்யூஆர் கோடு மூலம் பலரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மனோகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

x