கடலூர்: பண்ருட்டி அருகே வேலன்குப்பம் செல்லும் வழியில் உள்ள காடாம்புலியூர் கல்லான்குளம் அருகில் அய்யனார் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலின் பின்புறம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் - இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சின்னபுறங்கனி கிழக்குத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (25), வேலன்குப்பம் தெற்குத் தெருவை சேர்ந்த விக்ரம் (25), பழைய பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த சந்தனபிரபு (32) ஆகிய 3 பேரும் பிளாஸ்டிக்கால் ஆன 122 செ.மீ நீளமுள்ள துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தனர்.
போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்திய போது, எலி மற்றும் அணில் ஆகியவற்றை வேட்டையாட யூடிபூப்பைப் பார்த்து துப்பாக்கி தயாரித்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.