மயிலாடுதுறையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை


மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் (25). இவர், 2019ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கதிரவனை கைது செய்தனர்.

இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கதிரவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார்.

x