கள்ளக்குறிச்சியில் பெண் மர்ம மரணம்: 3 பேர் மீது வழக்குப் பதிவு


கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈருடையாம்பட்டை அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகனுக்கும் (34), மூங்கில்துறைப்பட்டை அடுத்த பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதிக்கும் (22) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஓராண்டிலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் ரேவதி தனது தாய் வீட்டுக்கு திரும்பினார்.

5 வருடங்களாக பிரிந்திருந்த ரேவதியை, கடந்த 19ம் தேதி, பிரம்மகுண்டத்துக்குச் சென்று, மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு முருகன் அழைத்து வந்துள்ளார். இதற்கிடையே ரேவதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மூங்கில்துறைப்பட்டு போலீஸார், முருகன், அவரது தந்தை ஏழுமலை, தாய் மாரியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

x