கடலூர்: 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!


கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பர் கிராமத்தில் கடந்த 1997ம் ஆண்டு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் 12 பேர் மீது கொலை முயற்சி உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை, விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கின் 2-வது எதிரி சிறுவம்பர் வடக்குத் தெருவை சேர்ந்த முனியன் மகன் அரசு (47) என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. இதைத்தொடர்ந்து, அவரைப் பிடிக்க தனி வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

இந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அரசுவை மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் அப்பகுதியில் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

x