கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கில் கைதான முக்கிய நபர்களுக்கு ஜாமீன்!


கன்னுக்குட்டி என்ற கோவிந்த ராஜ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைதான சாராய வியாபாரிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டிக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து 67 பேர் இறந்தனர். இந்த வழக்கில் கள்ளச்சாராய வியாபாரிகளான தாமோதரன், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில் தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர்மோகன் முன்பாக நடந்தது. அப்போது இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாராய வியாபாரிகளான தாமோதரன், கன்னுக்குட்டி ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் விசாரணை அதிகாரி முன்பாக தினமும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு ள்ளார்.

x