டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நாளை (ஏப்.23) தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவி்த்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக்கில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறையினர் அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவி்க்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோரும், தமிழக அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் ஆஜராகி வாதிட்டனர்.
இதேபோல அமலாக்கத் துறை தரப்பி்ல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் எஸ்.வி.ராஜூ, ஏ.ஆர்.எல். சுந்தரேசன், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
டாஸ்மாக் மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் நாளை (ஏப்.23) தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.