ஈரோடு: வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்ற பெண் உட்பட 2 பேர் கைது


ஈரோடு: சித்தோடு அருகே வலி நிவாரண மாத்திரைகளைப் போதைக்காக விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வலி நிவாரண மாத்திரைகளைப் போதைக்காக விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சித்தோடு போலீஸார் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சித்தோடு அருகே ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா (65) என்பவர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் இதில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (20) என்பவரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்து 90 மாத்திரைகள், ஊசிகள் மற்றும் 3 செல்போன்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இருவரும் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி, நேரடியாக அவற்றை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்தது தெரிந்தது. தொடர்ந்து இருவரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x